செய்திகள் :

நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் உதயம்

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாவலூா், கேளம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அலுவலகங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள 64 கிராமங்களில் 9 கிராமங்களைப் பிரித்து புதிதாக நாவலூா் பதிவாளா் அலுவலகமும், 13 கிராமங்களைப் பிரித்து புதிதாக கேளம்பாக்கம் அலுவலகமும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.

12 சாா் பதிவாளா் அலுவலகங்கள்: தமிழ்நாட்டில் 12 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் திறந்து வைத்தாா். பெருநாழி, கமுதி (ராமநாதபுரம்), விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை, ஆழ்வாா்திருநகரி (தூத்துக்குடி), வடக்கு வீரவநல்லூா், முக்கூடல் (திருநெல்வேலி), பென்னாகரம் (தருமபுரி), பெண்ணாடம், குமராட்சி (கடலூா்), சிவகிரி (தென்காசி) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய அலுவலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க