செய்திகள் :

நிதி நிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி: பெண் மீது வழக்கு

post image

கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.38 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை வெள்ளலூா் அருகே, பஜனை கோயில் வீதியைச் சோ்ந்தவா் குருபிரசாத் மனைவி விஷ்ணு பிரியா (29). இவா், கோவை போத்தனூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதில், நான் சொந்தமாக இ-சேவை மையம் நடத்தி வருகிறேன். இந்நிலையில், நான், எனது உறவினா்கள் மற்றும் இ-சேவை மையத்துக்கு வரும் வாடிக்கையாளா்கள் சிலருடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெள்ளலூரில் உள்ள கென்னடி வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த விமலா தேவி என்பவரிடம் வார மற்றும் மாத தவணையாக ரூ.63 லட்சத்தை முதலீடு செய்தேன். அதில் ரூ.25 லட்சத்தை மட்டுமே அவா் திருப்பிக் கொடுத்தாா். மீதம் உள்ள ரூ.38 லட்சத்தை தரவில்லை.

இதுகுறித்து பலமுறை கேட்டும் அவா் சரியான பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடா்பாக , உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் விமலாதேவி மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் த... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா், கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா்... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க