செய்திகள் :

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் இன்று(ஆக. 23) தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"தமிழ்நாட்டிற்கு என்று பல சிறப்புக்கள் உள்ளன. எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல முற்போக்கான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்தது திராவிடம். பல்வேறு முற்போக்கான திட்டங்களுக்கு பல தலைவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்

ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டியும் தமிழ்நாடு அரசு முறியடித்துள்ளது. தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பு முழக்கத்தை பல மாநிலங்களும் ஏற்க முன்வந்துள்ளன.

1968இல் இரு மொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக அண்ணா நிறைவேற்றினார். மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாடு அரசியல் சமூக நீதி அரசியலாகத்தான் இருக்கிறது. அனைத்து மக்களுக்கான சமூகநீதி அரசாக திமுக உள்ளது.

பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது. மாநிலங்கள் சுயாட்சி பெற தமிழ்நாடு அரசு இந்த தேசிய கருத்தரங்கை நடத்துகிறது.

மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் உரிய நிதி பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளை மீறி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்" என்று பேசினார்.

TN Chief minister MK stalin speech on National Seminar on Union-State Relations

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட வேண்டும்- தமிழிசை

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று தென் சென்... மேலும் பார்க்க

மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு: விஜய்

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரை மாநாடு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 15,850 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வ... மேலும் பார்க்க

தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!

தவெக மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் வியாழக்கிழமை(ஆக. 21) மாலை நடைபெற்றது. தவெக மாநா... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7.30 மணி வரை கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்கா... மேலும் பார்க்க

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் ... மேலும் பார்க்க