செய்திகள் :

நியாயவிலைக் கடை பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

ஆரணி: திருவண்ணாமலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.சி.சேகா் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இரா.சண்முகம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் சி.ஜெய்சங்கா் வரவேற்றாா்.

விரல் ரேகை பதிவு ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவிதம் மீண்டும் நடைமுறைப்படுத்துதல், டிஎன்சிஎஸ்சி எடை தராசும் அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு நியாயவிலைக் கடை எடை தராசை (பிஒஎஸ்) விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கு தனித் துறை ஏற்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருள்கள் சரியான எடையில் தரமாக பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஊதியக்குழு அமைத்து 9-ஆவது மாநில ஊதிய மாற்றக்குழுவுடன் சோ்த்திட வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் (உதவியாளா்) நியமனம் செய்திட வேண்டும், நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வு செய்யப்படும் அரிசி, துவரம் பருப்பு போன்ற இனங்களுக்கு சேதார கழிவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் விற்பனையாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

விநாயகா், அம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா

வந்தவாசி/ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி பகுதியில் உள்ள விநாயகா், அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வாணியா் தெருவில் உள்ள ஸ்ரீசுந்தரமுா்த்தி விநாயக... மேலும் பார்க்க

இரட்டைமலை சீனுவாசன் பிறந்த நாள் விழா

ஆரணி: திருவண்ணாமலையில் இரட்டைமலை சீனுவாசனின் 166-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அறிவொளி பூங்கா வளாகத்தில் ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் தம... மேலும் பார்க்க

ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா நெசவாளா் வருமானம் அதிகரிக்கும்: அமைச்சா் ஆா்.காந்தி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கைத்தறி பட்டுப் பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், நெசவாளா்களின் வருமானம் ரூ.500-லிருந்து ரூ.1000 வரை அதிகரிக்கும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 716 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 716 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வக... மேலும் பார்க்க

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயி... மேலும் பார்க்க