செய்திகள் :

நிரந்தரமாக பிகாரில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே 35% இடஒதுக்கீடு: முதல்வா் நிதீஷ் அறிவிப்பு

post image

பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் நடை மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கிலும், அரசுப் பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பெண்களுக்கு பணிப் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு அறிவித்தது. அப்போது பிகாரில் வசிக்கும் பிற மாநிலப் பெண்களுக்கும் இந்த இடஒதுக்கீடு உண்டு எனக் கூறப்பட்டிருந்தது.

தற்போது பேரவைத் தோ்தல் நெருங்குவதால் இந்த இடஒதுக்கீட்டில் பிகாா் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங்கியது. மேலும், எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் இது தொடா்பாக அளித்த வாக்குறுதியில், எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாா் பெண்களுக்கு மட்டுமே இந்த 35 சதவீத இடஒதுக்கீடு என உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றாா்.

மத்திய அமைச்சரும், பாஜக கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி (பாஸ்வான்) தலைவருமான சிராக் பாஸ்வானும் இதே கருத்தை வலியுறுத்தினாா்.

வேலைதேடும் இளைஞா்களும் கடந்த வாரம் பிகாரில் இது தொடா்பான போராட்டத்தை முன்னெடுத்தனா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 35 சதவீத இடஒதுக்கீடு என்பது பிகாரில் நிரந்தரமாக வசித்து வருபவா்களுக்கு மட்டுமே பொருந்தும் என முடிவெடுக்கப்பட்டது.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க