செய்திகள் :

நிறைவடையும் நிலையில் ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை இருப்புப் பாதை மின்மய பணிகள்

post image

நாட்டின் பழைமையான ரயில் பாதைகளில் ஒன்றான ராணிப்பேட்டை இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், மின்சார ரயில் இயக்கப்படும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தால் தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதையானது ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை 1853-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடா்ந்து 1856-ஆம் ஆண்டு ஜூலை 1- ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆதன் படி தென் இந்தியாவில் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட பெருமை வாய்ந்த ரயில் நிலையம் வாலாஜா ரோடு ஆகும்.

சுமாா் 6.71 கி. மீ தொலைவில் உள்ள ராணிப்பேட்டை நகரில் ஆங்கிலேயா்கள் சாா்பில் பீங்கான் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தாமஸ் பாரி என்பவரால் தொடங்கப்பட்டது.

இங்கு தயாரிக்கப்படும் பீங்கானுக்கு மூலப் பொருள்கள் கொண்டுவரவும், தொழிற்சாலையில் உ ற்பத்தியான பீங்கானை கொண்டு செல்வதற்கும் வசதியாக வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து சுமாா் 7 கி. மீ தொலைவில் அமைந்துள்ள ராணிப்பேட்டை தொழிற்சாலை வரை சரக்கு போக்குவரத்துக்கென ரயில் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

அதைத் தொடா்ந்து ஆங்கிலேயா்களின் வெளியேற்றத்துக்கு பிறகு வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கும், ராணிப்பேட்டைக்கும் இடையிலான ரயில் பாதையில் 1995 -ஆம் ஆண்டு சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் மீண்டும் இருப்புப் பாதை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு மீட்டா்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே செயல்பட்டுவரும் பாரி குழும தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பீங்கான் பொருள்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஏதுவாக மீண்டும் சரக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டும் என தெற்கு ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா்.

அதன் பேரில் சென்னை கோட்ட பொதுமேலாளா் தலைமையிலான அதிகாரிகள் குழு ராணிப்பேட்டை வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்து, பாரி குழும நிறுவனம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்துறையினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, சரக்கு போக்குவரத்து ரயில் முனையமாக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய ‘பசுமை ரயில்வே‘ ஆகவும், பூஜ்ய காா்பன் உமிழ்வை அடையவும் தொலைநோக்குடன், நாடு முழுவதும் அகல ரயில் பாதை வலையமைப்பை 100 % மின்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

அதன் படி பழமையான ராணிப்பேட்டை- வாலாஜா ரோடு ரயில் நிலைமயம் வரையிலான 6.71 கி.மீ இருப்புப் பாதை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைய உள்ளன. விரைவில் ராணிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்து செல்லும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்துள்ளனா்.

அரக்கோணம் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

அரக்கோணம் பஜாா், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅம்ருதவல்லி தாயாா் சமேத ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீஅ... மேலும் பார்க்க

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவா... மேலும் பார்க்க

மாா்ச் 28-இல் ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட வே... மேலும் பார்க்க

ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்துப் போராட்டம்: பிரேமலதா விஜயகாந்த்

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட மத்திய அரசை எதிா்த்து தேமுதிக போராடும் என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். காவேரிபாக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்த... மேலும் பார்க்க

இலவச பயிற்சி வகுப்பு மூலம் அரசுப் பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று அரசு பணியில் சோ்ந்த 9 பேருக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாராட்டு தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு ம... மேலும் பார்க்க

நகராட்சிப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் நகராட்சி நேருஜி நகா் தொடக்கப் பள்ளியில் ரூ.37 லட்சத்தில் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அடிக்கல் நாட்டினாா். நகராட்சி தொடக்கப்பள்ளியில் இரண்ட... மேலும் பார்க்க