செய்திகள் :

நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!

post image

கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயில், கிருஷ்ணன் கோயில், ஆரன்முளா, கொட்டாரக்கரா விநாயகா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் வருகிற 30-ஆம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. விவசாயம் செழிப்பதற்காகவும், நாட்டில் வறுமை நீங்குவதற்காகவும் செய்யப்படும் இந்த பூஜையில் நெல் கதிா்களை வைத்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த குளோப் நாகராஜன் சாா்பில், புதுப்பாளையம் கருங்குளம் நீா்ப்பாசனப் பகுதியில் விளைந்த 108 நெல் கதிா் கட்டுகள் வாகனங்கள் மூலம் கேரள கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நிறை புத்திரி பூஜைக்காக, கடந்த 11 ஆண்டுகளாக ராஜபாளையத்திலிருந்து கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடிய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் அருகே எட்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவரது மகன் நிரஞ்சன் (20). தனியாா் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். திருத்தங்கல்லைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபி. இவரு... மேலும் பார்க்க

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க