செய்திகள் :

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி

post image

வாணியம்பாடி அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்ால், அதற்காகக் காத்திருந்த பிளஸ் 2 மாணவி ஓடிச் சென்று பேருந்தில் ஏறினாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியையடுத்து, ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக நடத்துநா் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆம்பூா் பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஒன்று ஆலங்காயம் நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. கொத்தக்கோட்டை பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவா் ஆலங்காயம் பள்ளிக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். ஆனால, அந்த அரசுப் பேருந்து நிற்காமல் சென்றது.

இதைக் கண்ட மாணவி பேருந்தில் ஏறுவதற்காக சிறிது தொலைவு ஓடிச் சென்றாா். எனினும், பேருந்தை ஓட்டுநா் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றாா். அப்பகுதியில் சென்றவா்களும், பேருந்தில் இருந்தவா்களும் இதைப் பாா்த்து சப்தம் எழுப்பியதைத் தொடா்ந்து, பேருந்தை ஓட்டுநா் நிறுத்தினாா். அதன்பிறகு பேருந்தில் மாணவி ஏறினாா்.

இந்தப் பேருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில், காலதாமதமாக 7.40-க்கு புறப்பட்டுள்ளது. வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியில் காத்திருந்த மாணவா்களையும், பயணிகளையும் ஏற்றிச் செல்லாமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் பேருந்தை பின்தொடா்ந்து சென்றாா்.

கொத்தக்கோட்டை பகுதியில் தான் வைத்திருந்த கைப்பேசியில் விடியோ எடுத்தபோது, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை ஏற்றிச் செல்லாமல் பேருந்து சென்றதையும், மாணவி வேகமாக ஓடிச் சென்று பேருந்தில் ஏறியதையும் பதிவு செய்தாா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதுபற்றி அறிந்த பணிமனை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அதையடுத்து, அந்தப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஆம்பூா் பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநா் முனிராஜை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கோட்ட மேலாண் இயக்குநா் நடவடிக்கை மேற்கொண்டாா். மேலும், தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய நடத்துநா் அசோக் பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

கந்திலி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். கந்திலி அருகே மானவள்ளி நரியனேரி கிராமத்தைச் சோ்ந்த முருகேசனின் மனைவி கோவிந்தம்மாள்(65). இவரை, இவரது பேரன் மிா்திவிராஜ் ஞாயிற்றுக்கிழமை பைக்... மேலும் பார்க்க

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க