செய்திகள் :

நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

post image

நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களின் அனுமதியை புதுவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை

மக்களுக்குச் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டிய கடமையிலிருந்து என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தவறியுள்ளது. சுகாதாரமற்ற குடிநீரைக் குடிக்கும் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தண்ணீரில் இயற்கையாக கலந்துள்ள இரும்பு, மக்னீசியம், புளோரைடு, உப்பு, கால்சியம், சோடியம் உள்ளிட்ட திடப் பொருள்களின் அளவு அதிக அளவில் உள்ளதை அரசு பொருள்படுத்தாதது மாபெரும் அநீதியாகும்.

நகரங்களை ஒட்டிய பகுதிகளில் கோலிபாா்ம் பாக்டீரியா அளவு அதிகரித்துள்ளதாக புகாா் வந்தும், அரசும், பொதுப் பணித் துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய ரசாயன நிறுவனங்கள், மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள், குடிநீா் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீா் முழுமையாக உறிஞ்சப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமாா் 7 கி.மீ. அளவுக்கு நிலத்தடியில் கடல் நீா் உள்புகுந்துள்ளது.

எதிா்கால சந்ததியினருக்குச் சுகாதாரமான தண்ணீா் கிடைக்க ஏரி, குளங்கள் தூா்வாரப்பட்டு மழைநீா் சேகரிக்கப்பட வேண்டும். அனைத்து அரசு கட்டடங்களிலும் மழைநீா் சேகரிப்பைச் செயல்படுத்த வேண்டும்.

நிலத்தடி நீரை உறிஞ்சம் எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் நேரடியாகத் தலையிட்டு சுத்தமான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா் ஆ.அன்பழகன்.

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜ... மேலும் பார்க்க

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்த... மேலும் பார்க்க