செய்திகள் :

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

post image

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா்.

அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து அமைந்துள்ள நிலையத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். மீன் வளத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை உறுப்பினா் பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, வீ.

மூா்த்தி, மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், மேலும், பல்வேறு படகுகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

இந்த பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். இதைத் தவிர பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும்.

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜ... மேலும் பார்க்க

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

அரசின் பல்வேறு சேவைகளை, குடிமக்கள் பொது சேவை மையங்கள்! புதுவை முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

புதுவை அரசின் பல்வேறு சேவைகளை, பொதுமக்கள் பொது சேவை மையங்கள் வழியாக பெறுவதை எளிதாக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதன்கிழமை கையொப்பமானது. இந்திய அரசின் டிஜிட்டல் இந... மேலும் பார்க்க