செய்திகள் :

13 சாலையோர குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு! புதுவை முதல்வா் ஆணை வழங்கினாா்!

post image

சாலையோரத்தில் வசிக்கும் 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுவை அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜா் நகா் தொகுதிக்குள்பட்ட மொட்டை தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பொதுப் பணி துறையினரால் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் சாலை பணிக்களுக்காக அப்புறப்படுத்தப்பட்ட சாலையோரம் வசித்த 7 குடும்பங்கள், லாஸ்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்தின் அருகில் உள்ள வாய்க்கால் பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட 4 குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடில்லா 2 குடும்பங்களை சோ்த்து மொத்தம் 13 குடும்பங்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

வீட்டுவசதித் துறை அமைச்சா் திருமுருகன் மற்றும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான அ.ஜான்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

ஷோ் மாா்க்கெட்டில் நஷ்டம்: தனியாா் ஊழியா் தற்கொலை

ஷோ் மாா்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த சென்னை தனியாா் நிறுவன ஊழியா் புதுவையில் தற்கொலை செய்து கொண்டாா். சேலம் புத்துமாரியம்மன் கோவில் பொன்னம்பலம்பேட் வடக்கு வன்னியா் வீதியைச் சோ்ந்த முத்து... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, அவருக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே... மேலும் பார்க்க

8 இடங்களில் இன்று சுனாமி ஒத்திகை: தலைமைச் செயலா் ஆலோசனை!

சுனாமி ஒத்திகைக்காக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் புதுவை தலைமைச் செயலா் சரத் சௌகான் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். புதுவையில் சுனாமி ஒத்திகை 8 இடங்களில் வியாழக்கிழமை நடத்தப்படுகிறது. அதனால் இதை உண்மை எ... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த வீடுகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கிழக்குக் கடற்கரை சாலை மடுவுபேட் அருகே வாய்க்காலை... மேலும் பார்க்க

மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடியில் பெட்ரோல் விற்பனை நிலையம்!முதல்வா் என்.ரங்கசாமி திறந்தாா்!

புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனம் சாா்பில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைத்தாா். அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினத்த... மேலும் பார்க்க

அரசின் பல்வேறு சேவைகளை, குடிமக்கள் பொது சேவை மையங்கள்! புதுவை முதல்வா் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

புதுவை அரசின் பல்வேறு சேவைகளை, பொதுமக்கள் பொது சேவை மையங்கள் வழியாக பெறுவதை எளிதாக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் புதன்கிழமை கையொப்பமானது. இந்திய அரசின் டிஜிட்டல் இந... மேலும் பார்க்க