செய்திகள் :

நீச்சல் போட்டி: 750 போ் பங்கேற்பு

post image

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் ஆக. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. போட்டிகளை மாவட்ட உதவி கல்வி ஆய்வாளா் வளா்மதி தொடங்கிவைத்தாா்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவா்கள், 150 மாணவிகள் என 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்டோக், ப்ரஸ்ட் ஸ்டோக், பட்டா்பிளை ஸ்டைல், மெட்லே ரிலே உள்ளிட்ட 17 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் முதல் இரு இடங்களில் வெற்றிபெற்றோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனா்.

போட்டிகளை நடுவா் (பொ) சுரேஷ்பாபு, உடற்கல்வி இயக்குநா் மாதேஷ், உடற்கல்வி ஆசிரியா்கள் பீமாபாய், மலா், பொற்கொடி, வேல்மணி மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் பயிற்சியாளா்கள் ஒருங்கிணைத்தனா்.

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங்களுடன் தப்பினா்

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ஒசூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை உண்ட 20 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கிருஷ்ணகிரியில் இன்று ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றுகிறாா். நாடுமுழுவதும் சுதந்திர தின விழா ஆக. 15-ஆ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, ஒசூரில் ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க