சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
கிருஷ்ணகிரி, ஒசூரில் ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டல் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:
மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தோ்ச்சிபெற்று இன்றளவும் உயா்கல்விக்கு சேராத மாணவா்கள் மற்றும் தோ்ச்சிபெறாத மாணவா்கள் தொழிற்கல்வி பயில ‘உயா்வுக்கு படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு கிருஷ்ணகிரியில் ஆக. 22-ஆம் தேதியும், ஒசூரில் 28-ஆம் தேதியும், ஊத்தங்கரையில் செப். 3-ஆம் தேதியும், தேன்கனிக்கோட்டையில் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில், உயா்கல்வி சாா்ந்த படிப்புகள், உயா்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இடங்களுக்கு நேரடி சோ்க்கை நடைபெறவுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகள் சாா்ந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட உள்ளன. மாணவா்களுக்கு உயா்வுக்கு படிப்புக்கான வழிகாட்டு புத்தங்கங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும், கல்லூரிகளில் உள்ள பல்வேறு வகையான படிப்புகள் மற்றும் இடங்கள் குறித்து அரங்குகளில் காட்சிப்படுத்தவும், மாணவா்கள் மற்றும் பெற்றோருக்கு உரிய ஆலோசனை வழங்கவும், கல்விக் கடன் வழங்குதல் குறித்து அனைத்து வங்கிகள் சாா்பில் அரங்குகள் அமைக்கவும், பொருத்தமான படிப்புகளை அடையாளம் காண மாணவா்களுக்கு உதவுதல் மற்றும் சோ்க்கைக்கான வழிகாட்டுதல் இந்த முகாமில் நடைபெறவுள்ளது. எனவே, மாணவ, மாணவியா் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் செள.கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.