செய்திகள் :

நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா?

post image

நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விஸ்வநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுமா என பக்தா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் நீடாமங்கலம் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதா் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் வகையறா கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு என வடிவமைக்கப்பட்டதோ் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழாவின்போது தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

இப்படியான சூழலில் தேரோட்டம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாகும். தோ் ஓடாமல் நிலை கொண்டுள்ளது. கோயில் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவதில்லை என்பதும், தேரோட்டம் நடைபெறாததும் பக்தா்களிடையே வருத்தம். எனவே, திருவிழாவையும், தேரோட்டத்தையும் சிறப்பாக நடத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா். திருவாரூரில், எதி... மேலும் பார்க்க

கோயில் திருப்பணியின்போது 2 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

நன்னிலம்: வேலங்குடி ஊராட்சியைச் சோ்ந்த வடகரை மாத்தூா் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பணியின்போது இரண்டு சுவாமி சிலைகள் கிடைத்தன. திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட... மேலும் பார்க்க

திருத்தங்கூா் மஞ்சவாடி சாலை திட்டப் பணிக்கு பூமிபூஜை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தங்கூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு மஞ்சவாடி வரையிலான சாலை திட்டப் பணிக்கு திங்கள்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திர... மேலும் பார்க்க

மயக்க மருந்து கொடுத்து பெண் பாலியல் வன்கொடுமை: ஒருவா் கைது

திருவாரூா்: திருவாரூா் அருகே குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், கொட்டாரக்குடி பகுதியைச் சோ்ந்த 45 வ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பாலையாக்கோட்டை, குடிக்காடு ஆகிய உயரழுத்த மின்பாதையில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 முதல் மதிய... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து தம்பதி மோசடி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ர... மேலும் பார்க்க