செய்திகள் :

நீட் தேர்வில் தொடர் தோல்வி: சேலம் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

post image

நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்பதால் சேலம் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் நரஜோதிபட்டி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சன். டிங்கரிங் பட்டறை வைத்து நடத்தும் இவரின் மனைவி யோகலட்சுமி. இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் கௌதம்(20) கடந்த 2023ல் ஜெயின் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.

கடந்த 2 ஆண்டுகள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது ஆண்டாக கடந்த மாதம் நீட் தேர்வை எழுதினார் கெளதம். இந்தத் தேர்விலும் மதிப்பெண்கள் குறையும் என்ற பயத்தில் இருந்து வந்த அவர் தோல்வி பயம் காரணமாக மனமுடைந்து நேற்று(திங்கள்) மாலை 6.15 மணிக்கு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வில் தொடர் தோல்வி காரணமாக மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க | இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட... மேலும் பார்க்க

வடபழனியில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்க ரூ. 10 கோடியில் உயர்நிலை மேம்பாலம்

சென்னை: சென்னை வடபழனியில் இரண்டு மெட்ரோ நிலைய வழித்தடங்களை இணைக்க ரூ. 10 கோடி செலவில் உயர்நிலை மேம்பாலம் அமைக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தம... மேலும் பார்க்க

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால் கைவிட வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இருந்தால் அரசு அதனைக் கைவிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பருவமழை: சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு நடவடிக்கை - முதல்வரின் அறிவுறுத்தல்கள்!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதையொட்டி பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் 3,000-வது குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 3,000-வது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலி... மேலும் பார்க்க