செய்திகள் :

நீதித் துறை குறித்து விமா்சனம்: சீமான் மீது வழக்குப்பதிய காவல் துறைக்கு உத்தரவு

post image

நீதித்துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமா்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது வழக்குப்பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை எழும்பூா் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்குரைஞா் சாா்லஸ் அலெக்ஸாண்டா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்தாண்டு நவம்பரில், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை விமா்சித்துப் பேசியதாகக் கூறியிருந்தாா். இந்த வழக்கை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் சாா்லஸ் அலெக்ஸாண்டா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஒரு அரசியல் கட்சியின் தலைவரான சீமான், கண்ணியமாகவும், நாகரிகமாகவும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அவா் பேசியுள்ளாா். அவா் மீது சட்ட ரீதியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் புகாா் குறித்து வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க