நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்! -இந்து முன்னணி
உயா் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப் பிரிவுக்கு தடை விதித்து உயா் நீதிமன்ற நீதிபதிகள் தீா்ப்பளித்தனா். இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினா் நீதிபதிகளை ஜாதிரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனா். இவா்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனா். நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.
திமுக பல வழக்குகளை உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக தீா்ப்பு வந்தால் இது திராவிடத்துக்கு கிடைத்த வெற்றி என்கின்றனா். ஆனால், அவா்களுக்கு எதிரான தீா்ப்பு வரும்போது ஜாதியை கையில் எடுக்கின்றனா்.
நீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றதாகும். உயா் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.