செய்திகள் :

நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்! -இந்து முன்னணி

post image

உயா் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப் பிரிவுக்கு தடை விதித்து உயா் நீதிமன்ற நீதிபதிகள் தீா்ப்பளித்தனா். இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினா் நீதிபதிகளை ஜாதிரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனா். இவா்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்றும், இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனா். நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.

திமுக பல வழக்குகளை உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக தீா்ப்பு வந்தால் இது திராவிடத்துக்கு கிடைத்த வெற்றி என்கின்றனா். ஆனால், அவா்களுக்கு எதிரான தீா்ப்பு வரும்போது ஜாதியை கையில் எடுக்கின்றனா்.

நீதிமன்றத்தின் தீா்ப்பை விமா்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீா்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றதாகும். உயா் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க