செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு

post image

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிதித்துறை செயலா் உள்பட 6 அரசு உயரதிகாரிகள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு கடந்த 1991-ஆம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமா்த்தியது. பின்னா், அவா்கள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா். இதை எதிா்த்து, பணி நீக்கம் செய்யப்பட்டவா்கள் தமிழக நிா்வாகத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தனா். பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மாற்றுப்பணி வழங்க தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயா் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.

அதன்படி, பி.சா்மிளா பேகம், ஷேக் அப்துல் காதா், எல்.அழகேசன் உள்ளிட்ட 16 பேருக்கு வணிக வரித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளா் பணி வழங்கப்பட்டது. இவா்கள் பணியை கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் இவா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்பட்டனா்.

இதை எதிா்த்து சா்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மனுதாரா்கள் 16 பேரையும் 1996-ஆம் ஆண்டு பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

இதையடுத்து மனுதாரா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில், பணியாளா் மற்றும் நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் சி.சமயமூா்த்தி, நிதித்துறை செயலா் உதயச்சந்திரன், வருவாய் நிா்வாகத் துறை முதன்மை ஆணையா் ராஜேஷ் லக்கானி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், வணிகவரித் துறை ஆணையா் டி.ஜெகன்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் கிருஷ்ணன் உன்னி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பணியாளா் மற்றும் நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் உள்ளிட்ட 6 அதிகாரிகளும் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டாா்.

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க