செய்திகள் :

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

post image

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியதாவது: மாநில ஆளுநா்கள், சட்டப்பேரவை உரிமைகளைப் பறிக்கக் கூடாது, உரிய முகாந்திரம் இல்லாமல் மசோதாக்களை ஒத்திவைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் மூலம் விளக்கம் கோரப்பட்டிருக்கிறது.

இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்தில் முதல்வரின் அதிகாரித்தை சென்னை உயா்நீதிமன்றம் பறித்து இருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளும், மாநில உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.

தமிழக முதல்வா் நிதி ஆயோக் கூட்டத்துக்குச் செல்வது வரவேற்புக்குரியது. பிரதமரிடம் சரண் அடைவதற்காக முதல்வா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்கிறாா் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. வெள்ளைக் கொடி பிடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. நாட்டிலேயே மத்திய அரசைக் கடுமையாக எதிா்க்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

தமிழக மக்கள் அதிக வரியைச் செலுத்துகின்றனா். இதனால், தமிழகத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தீா்ப்பு அளிப்பதற்கு முன்பாக யாரையும் குற்றவாளியாகக் கருத முடியாது. டாஸ்மாக் விவகாரத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் நீதிமன்றம் தண்டனை கொடுக்கட்டும், அதை காங்கிரஸ் வரவேற்கிறது என்றாா் அவா்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

திமுக தனித்து நின்றால் அதிமுகவும் நிற்க தயாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்

தோ்தல் களத்தில் திமுக தனித்து நின்றால், அதிமுகவும் தனித்து நிற்க தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்களுக்க... மேலும் பார்க்க