செய்திகள் :

நீலகிரி பழங்குடி சிறுமி பாலியல் வன்கொடுமை: 'கடைசி மூச்சு வரை சிறைத் தண்டனை' - நீதிமன்றம் தீர்ப்பு

post image

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவர், நீலகிரியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்திருக்கிறார்.

கடந்த 2020-ம் பொங்கல் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்ற அந்த மாணவி, 28- 01- 2020 அன்று பள்ளிக்குத் திரும்ப பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார்.

Child Abuse
Child Abuse

அப்போது அந்த வழியாக காரில் சென்ற இளைஞர் ஒருவர், ஏதோ சொல்லி மாணவியை காரில் ஏற்றியிருக்கிறார். மாணவி நிறுத்தச் சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் இயக்கிச் சென்று காரமடை பகுதிக்குக் கடத்திச் சென்றிருக்கிறார்.

அங்குள்ள தனியார் வொர்க் ஷாப் ஒன்றிற்கு மாணவியை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.

மறுநாள் காலை மாணவியை அழைத்து வந்து நீலகிரி மாவட்ட எல்லையில் இறக்கிவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

முரளி
முரளி

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான முரளி என்பவர்தான் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடைசி மூச்சு வரை வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பு விதித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், முரளிக்கு அபராதம் விதித்ததுடன் தமிழக அரசிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்- அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் ரோஸ்னி கான். அங்குள்ள காந்தாரி பஜார் பகுதியில் வசித்து வரும் ரோஸ்னி கடந்த சில ஆண்டுகளாக தனது கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 6 வயதில் சோ... மேலும் பார்க்க

பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்பு!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!

திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில... மேலும் பார்க்க

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துற... மேலும் பார்க்க

நாமக்கல்: தனியார் பள்ளி பஸ் டிரைவர் அடித்துக் கொலை; சரக்கு லாரி டிரைவரைக் கைதுசெய்த போலீஸ்!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த வையநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (45). இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பள... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; பண மோசடி - ஜிம் பயிற்சியாளர் சிக்கிய பின்னணி!

சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அசோக் நகர் பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு ப... மேலும் பார்க்க