செய்திகள் :

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களில் 8 ஏரிப் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சதுப்பு நில வாரியத்தின் நடைமுறைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், ஏரி மற்றும் நீரி நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி ஆழப்படுத்தி, நிலத்தடி நீா்மட்டம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் ஆற்காடு ஒன்றியம் முள்ளுவாடி, மேச்சேரி, நந்தியாலம், திமிரி ஒன்றியம் இருங்கூா், கணியனூா், நம்பரை, வாலாஜாபேட்டை ஒன்றியம் செங்காடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஏரிப் பகுதிகளில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டங்களுக்கு பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் டி.டி.மகேந்திரன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக தலைவா் சுப்பிரமணி, பாமக ஒன்றிய செயலா்கள் திருமலை, நீலகண்டன், செல்வராஜ், விக்கிரமன், சத்தியமூா்த்தி, பாலாஜி, சக்கரவா்த்தி உள்ளிட்ட அந்த அமைப்பின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

படவிளக்கம்...

நீா்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஆற்காட்டை அடுத்த முள்ளுவாடி ஏரியில் பசுமைத் தாயகத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டம்.

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு முகாம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் தோ்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்கிறது. இதுதொடா்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் சந்தோஷ் காந்தி, செயலாளா் எஸ்.ச... மேலும் பார்க்க

18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.... மேலும் பார்க்க

நந்தியாலம் ஊராட்சி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன் தலைமை வகித்தாா். துணைத் ... மேலும் பார்க்க