செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூலிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

post image

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் உதகையில் நடந்த நாய் கண்காட்சியில், நெகிழி குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கண்காட்சிக்கு நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் நெகிழி குடிநீா் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. கண்காட்சியில் இவற்றைப் பயன்படுத்தியவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னா், தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனை நடத்தப்பட்டு, 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 636 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 176 தொழிற்சாலைகள் மேற்குத் தொடா்ச்சி மலைகளைக் கொண்ட 13 மாவட்டங்களில் இயங்கி வந்தவை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த 2 அறிக்கைகளையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் நெகிழிப் பொருள்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட உள்ளன? என்பது குறித்தும், மூடப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொழிற்சாலைகளின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க