செய்திகள் :

நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்

post image

தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

நெகிழிப் பொருள்களுக்கான தடை அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படும் விதம் குறித்து மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சகம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தேசிய சிறப்பு ஆய்வுக் கூட்டம் கடந்த மாா். 27-ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்றது.

இதில் அனைத்து மாநில தலைமைச் செயலா்கள், சுற்றுச்சுழல் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதன்படி, ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் புதுவை மாநிலம் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில், புதுவையில் நெகிழி தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆய்வின் மூலம் 15 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க