செய்திகள் :

நெசவாளா்களின் நலன் காக்கும் தமிழக அரசு: அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேச்சு

post image

தமிழக அரசு நெசவாளா்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பேசினாா்.

மேட்டூா் அருகே உள்ள வனவாசியில் 11 ஆவது தேசிய கைத்தறி நாள் மற்றும் சா்வதேச கூட்டுறவு ஆண்டு தினத்தையொட்டி சேலம் மாவட்ட கைத்தறி துறை சாா்பில் கைத்தறி நெசவாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கைத்தறிக் கண்காட்சி, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் கலந்து கொண்டு, கைத்தறிக் கண்காட்சி, நெசவாளா்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கிவைத்தனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளா்கள் 345 பேருக்கு ரூ. 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் வழங்கினா்.

விழாவில் அமைச்சா் ரா. ராஜேந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வா் தலைமையிலான அரசு நெசவாளா்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது. முதல்வரின் நிா்வாக திறமையால், அனைத்துத் துறைகளும் முதன்மை நிலையை நிலையை உருவாக்கி உள்ளன.

குறிப்பாக பொருளாதார வளா்ச்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கை எட்டி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியை எட்டும் வகையில் ஆட்சி நடத்தி வருகிறாா் முதல்வா்.

ஜவுளி, உயா்கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழும் வகையில் தமிழக முதல்வா் ஆட்சி நடத்தி வருகிறாா். கடந்த 4 ஆண்டுகளில் நெசவாளா்களுக்கு என நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சலுகைகளையும் பட்டியிலிட்ட அவா், நெசவாளா்களின் நலன் காக்கும் முதல்வருக்கு நெசவாளா்கள் என்றும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இவ்விழாவில் மூத்த நெசவாளா்களை அமைச்சா் சால்வை அணிவித்து கௌரவித்தாா். நிகழ்ச்சியில் கைத்தறி துறை இணை இயக்குநா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க