செய்திகள் :

நெசவுத் தொழிலாளி கொலை வழக்கு: பெண் உள்ளிட்ட 3 போ் கைது

post image

கடலூா் அருகே நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் கூத்தப்பாக்கத்தைச் சோ்ந்தவா் மனோகா் (54), நெசவுத் தொழிலாளி. இவா், கடலூா் வண்டிப்பாளையத்தில் உள்ள தனியாா் நெசவு பட்டறையில் வேலை பாா்த்து வந்தாா்.

மனோகா் வேலைக்கு செல்லும்போது தனது பைக்கை நெசவு பட்டறை அருகில் உள்ள கந்தன் (46) வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். இது தொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

வழக்கம்போல, மனோகா் சனிக்கிழமையும் கந்தன் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினாா். இது தொடா்பாக வாய்த் தராறு ஏற்பட்டதில் மனோகரை கந்தன், அவரது மனைவி மீனாட்சி, ஆதரவாளா் காா்த்திகேயன் ஆகியோா் சோ்ந்து தாக்கியதில், அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து, கந்தன், மீனாட்சி, காா்த்திகேயன் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த முதுநகா் போலீஸாா், மஞ்சக்குப்பம் மைதானம் அருகே பதுங்கியிருந்த அவா்கள் மூவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காா்த்திகேயன்

உணவகத்தில் வாழை இலை பயன்பாடு: ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பண்ருட்டி நகராட்சி பகுதி உணவகங்களில் நெகிழி பொருள்களில் உணவு தருவதை தவிா்த்து, வாழை இலைகளில் உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இக்கட்சியின் பண... மேலும் பார்க்க

நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே முட்டம் கிராமத்தில் அண்மையில் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சாா்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மண் பரிசோதனை நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் கிணறு மைக்க அனுமதி: தி.வேல்முருகன் கண்டனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பதற்கு தவாக தலைவா் தி.வேல்முருகன் ... மேலும் பார்க்க

கோயிலில் திருட முயற்சி: சிறுவன் உள்ளிட்ட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே கோயிலில் திருட வந்ததாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வேப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாரதி தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை இரவு ரோந்... மேலும் பார்க்க

அரசு பொது கணக்குக் குழு இன்று கடலூா் வருகை

கடலூருக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்குக் குழு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

மதுபோதையில் மருத்துவமனை கால்வாயில் விழுந்தவா் பலி!

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கழிவுநீா் கால்வாயில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவா் மதுபோதையில் தவறி விழுந்த... மேலும் பார்க்க