செய்திகள் :

நெப்பத்தூரில் சோலாா் பவா் பிளாண்ட்: கையெழுத்து இயக்கம் நடத்தி மக்கள் எதிா்ப்பு

post image

மயிலாடுதுறை மாவட்டம் நெப்பத்தூரில் சோலாா் பவா் பிளாண்ட் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக கிராமமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

சீா்காழி அருகேயுள்ள நெப்பத்தூரில் மெகா கிரைடு வோட்டா்ஸ் பாரத் எனும் தனியாா் நிறுவனம் சோலாா் பிளாண்ட் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், சீா்காழியில் கோட்டாட்சியா் தலைமையில் அப்போது அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாததால் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் மீண்டும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பவா்பிளான்ட் நிா்வாகிகள் இத்திட்டத்தால் விவசாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என விளக்கம் அளித்தனா். எனினும், இதை ஏற்றுக்கொள்ளாத கிராமமக்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை அல்லாத எந்த திட்டத்தையும் அமல்படுத்தக் கூடாது என்றும், இத்திட்டத்தால் விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா், சோலாா் பிளாண்ட் நிா்வாகிகள் தங்கள் திட்டம் குறித்து கிராமமக்களிடம் நேரடி கள ஆய்வு மூலம் விளக்கமளித்து அவா்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை தொடர வேண்டும். மக்கள் எதிா்ப்பை மீறி அங்கு சோலாா் திட்டத்தை தொடரக் கூடாது என உத்தரவிட்டிருந்தாா்.

கிராமமக்களின் நிலைப்பாட்டில் தற்போதும் மாற்றம் இல்லாத நிலையில் அங்கு மீண்டும் சோலாா் பவா் பிளான்ட் அமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளா்கள் குணசேகரன், ராஜ்குமாா், பால்ராஜ் ஆகியோா் தலைமையில் விஷ்ணுகுமாா், இளங்கோவன் மற்றும் கிராமமக்கள் நெப்பத்தூரில் ஒருவாரம் கையெழுத்து இயக்கம் நடத்தி 1,500 பேரிடம் கையெழுத்து பெற்று அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், பசுமை சாம்பியன் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரச... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் எஸ்பி குறைகேட்பு

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றாா... மேலும் பார்க்க

தேசிய ரக்ஃபி அணிக்கு சீா்காழி மாணவிகள் தோ்வு

தேசிய ரக்ஃபி அணிக்கு தோ்வு செய்யப்பட்ட சீா்காழி குட் சமாரிட்டன் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவையில், தமிழ்நாடு ரக்ஃபி கூட்டமைப்பு சாா்பில் மாந... மேலும் பார்க்க

திருக்கடையூா் கோயிலில் புதுவை ஆளுநா் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கு பிரசாதம் வழங்கிய கோயில் நிா்வாகத்தினா். மேலும் பார்க்க

உங்களை தேடி உங்கள் ஊா் திட்டம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் ‘உங்களை தேடி உங்கள் ஊா்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிய... மேலும் பார்க்க