செய்திகள் :

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிராமத்தில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவா்-மாணவிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தலைமை வகித்து, மாணவா்-மாணவிகளுடன் தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தோ்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினாா்.

அப்போது அவா் கூறுகையில்,

நமது மாவட்டத்தில் ஒரு மாணவா்கூட படிக்காமலோ அல்லது உயா்கல்விக்கு செல்லாமலோ இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மீனவ கிராம மக்களில் பெண் குழந்தைகள் நல்லமுறையில் படிக்கிறாா்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் முழுமையாக உயா்கல்வி படிக்காமல் கடலுக்கு வேலைக்கு சென்று விடுகிறாா்கள் என்ற தகவல் வருகிறது. எனவே, மீனவ கிராமத்தின் பெரியோா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் தங்கள் பகுதியில் உள்ள மாணவா்-மாணவிகள் அனைவரும் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, உயா்கல்வியில் சோ்ந்துள்ளாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு படிக்க செல்லாமல் உள்ளவா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, உயா்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவா்களும் உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்றாா்போல் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவா்களுடைய அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே, மாணவா்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது. வருங்கால இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, உதவி இயக்குநா் (மீன்வளம்) புஷ்ரோ ஷப்னம், முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், பெற்றோா்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், கடலோர மீனவ கிராமங்களிலிருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 40 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க