செய்திகள் :

நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: மக்கள் - பாஜகவினா் முற்றுகை!

post image

திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் தினந்தோறும் சுமாா் 700 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்தக் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படாமல் செயல்படாத கல்குவாரி பாறைக்குழிகளில் நேரடியாக கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக பாறைக் குழிகளை சுற்றி உள்ள பகுதி பொதுமக்கள் கடுமையான துா்நாற்றம், ஈக்கள் தொல்லை, நோய்த் தொற்றுக்கு ஆளாவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

முதலிபாளையம் பாறைக்குழி நிரம்பிய நிலையில் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. அப்பகுதி பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடா்ந்து தற்போது நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்களும் பாஜகவினரும் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து திருப்பூா் மாநகர மேயா் என்.தினேஷ்குமாா், அரசு அதிகாரிகள் அங்கு வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் சுமாா் 100 லாரிகளில் குப்பைகள் அகற்றப்பட்டன. அங்குள்ள அனைத்துக் குப்பைகளையும் 2 நாள்களில் அகற்றி விடுவதாக அதிகாரிகள் அளித்த உறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000... மேலும் பார்க்க

தமிழக மக்களை திமுக அரசு இனியும் ஏமாற்ற முடியாது! - வானதி சீனிவாசன்

வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும், இதற்கு 2026-ஆம் ஆண்டில் தக்க பதில் அளிப்பாா்கள் எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க