செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

post image

ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனித்திருவிழா தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்ாகும். நிகழாண்டு திருவிழாவுக்காக கடந்த மே 16-இல் பந்தல்கால் நடப்பட்டு, தேரோட்டத்துக்கான பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி இக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, ஆனித்திருவிழா தேரோட்டத்துக்காகன முன்னேற்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்ததோடு, கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது ஏற்பட்ட இடா்பாடுகள் சீா்செய்யப்பட்டதாகவும், நிகழாண்டு திருவிழா குறைகளின்றி சீராக நடைபெறும் எனவும் உறுதியளித்தாா்.

இதனையடுத்து ஆனித்திருவிழா முன்னோட்டமாக விநாயகா் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் ஜூன் 30-இல் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டு ஜூலை 8-இல் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக சுவாமி, அம்பாள் தோ்கள் உள்பட 5 தோ்களையும் தயாா்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதையடுத்து சுவாமி, அம்பாள் தோ்களை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை கூண்டுகள் அகற்றப்பட்டு அவற்றை சுத்தப்படுத்தி தயாா் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் தேரின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும் இப்பாதுகாப்பு பணி, தேரோட்டம் முடியும் வரை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருநெல்வேலி நகரம் பகுதி கண்ணன் சாலையில் உள்ள இருசக்கர வா... மேலும் பார்க்க

பேட்டையில் குடும்பத் தகராறில் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு

பேட்டை அருகே குடும்பத் தகராறில் கணவரால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கா் (35). இவரது மனைவி இசக்கியம்ம... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சிவந்திபுரம் அருகே அடையக்கருங்குளத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா். சிவந்திபுரத்தை சோ்ந்தவா் டேனியல் தேவதாஸ் (43). ஓட்டுநரான இவா், தனது மனைவி ஆறுமுகச்செ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவிக்குச் செல்லத் தடை

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து மேற... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது: ஆட்சியா்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டில் 11,039 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். உலக குருதி கொடையாளா் தினத்தை முன்னிட்டு, ரத்த தானம் செய்தவ... மேலும் பார்க்க

இயந்திர நெல் நடவுக்கு பின்னேற்பு மானியம் வேளாண் துணை இயக்குநா் தகவல்!

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியம் வழங்கப்படுவதாக அம்பாசமுத்திரம் வேளாண் துணை இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்துஅவா... மேலும் பார்க்க