செய்திகள் :

நெல்லையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சங்கர். இவருக்கு மனைவி சரஸ்வதி, 2 குழந்தைகள் உள்ளனர். செல்வ சங்கர் திமுகவின் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பொருளாளராகவும், அவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஒன்பதாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கச் சென்றனர்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் முன்பு திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த செல்வசங்கர் தம்பதியினர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஆங்காங்கே சிறுது சிறிதாக துகல்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர். தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த துகல்களை தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். .

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் தடய அறிவியல் துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த செல்வசங்கர் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல் என்றுமே எங்களுடைய பகுதி: சீனாவுக்கு இந்தியா பதில்

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு 'அபத்தமான' முயற்சி என கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் என்றுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும... மேலும் பார்க்க

‘ஜி’ லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ள கூகுள்!

நியூயார்க்: உலகின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமான ‘கூகுள்’ தேடுபொறி 'ஜி' லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய கூகுள் லோகோவில் பெரியளவிலான மாற்ற... மேலும் பார்க்க

சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம்: வைரலாகும் விடியோ காட்சி

சின்னதடாகம் பகுதியில் குட்டிகளுடன் ஆறு யானைகள் கூட்டம் ஒன்று சாலையை வேகமாக கடந்து வனப் பகுதிக்குள் செல்லும் செல்போன் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த பகுதி மக்கள் பாதுகாப்பா... மேலும் பார்க்க

கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!

திருச்சி: திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி திருவெறும்பூர... மேலும் பார்க்க

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், ... மேலும் பார்க்க

மே 16-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: அமைச்சர்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நில... மேலும் பார்க்க