நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது
திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் அருகே பாஜக பூத் கமிட்டி மாநாடு வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறாா். மேலும் மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த 8,595 பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, மத்திய அமைச்சா் எல்.முருகன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.