செய்திகள் :

‘நெல்லையில் பேருந்துகளில் வியாபாரம் செய்ய தடை தேவை’

post image

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் கணபதி, செயலா் ராமநாதன், பொருளாளா் ஆனந்த மணி உள்ளிட்டோா் தலைமையில் வியாபாரிகள், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹதிமணியிடம் அளித்த மனு:

புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் கடை நடத்தி வருகிறோம். இந்த கடைகளுக்கு ரூ. பல லட்சம் முன் பணம் மற்றும் வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறோம். இதை நம்பிதான் பல நூறு குடும்பங்கள் உள்ளன.

எவ்வித கட்டணங்களும் செலுத்தாமல் சிலா், நாங்கள் கடைகளில் விற்பனை செய்ய வைத்துள்ள அதே பொருள்களை பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் விற்பனை செய்து வருகின்றனா். நாங்கள் மாநகராட்சிக்கு மாத வாடகை, வணிக உரிமம், தொழில்வரி, சேவை வரி என அனைத்து விதமான வரிகளையும் கட்டி அதன் பின்னா் மின்சார கட்டணம், கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஊதிடம் உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு வழங்கி வருகிறோம். எனவே பேருந்துகளில் ஏறி வியாபாரம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க