செய்திகள் :

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

post image

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ரெஜினாவிற்கும் பக்கத்து வீட்டு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

மூலைககரைப்பட்டி காவல் நிலையம்
மூலைககரைப்பட்டி காவல் நிலையம்

நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையறிந்த ரெஜினாவின் மூத்த மகனான கொம்பையா தனது தாயையும் அந்த வாலிபரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தகாத உறவைக் கைவிடவில்லை. இரண்டு மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் ரெஜினா அந்த வாலிபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதனால் ரெஜினாவிற்கும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே நேற்று இரவில் ரெஜினாவும் பக்கத்து வீட்டு வாலிபரும் நெருக்கமாக இருந்துள்ளனர். திடீரென கண் விழித்த கொம்பையா, இதனைப் பார்த்து ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியுள்ளார். அந்த வாலிபர் தப்பி ஓடவே இரும்புக் கம்பியால் தாய் ரெஜினாவைத் தாக்கியுள்ளார்.

மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்
மூலைக்கரைப்பட்டி காவல் நிலையம்

பின்னர் ரெஜினாவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கவே அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பின்னர் கொம்பையா தாய் ரெஜினாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள கோயில் அருகில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.

இன்று காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூலக்கரைப்பட்டி போலீஸாருக்குத் தகவல் கூறியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கொம்பையாவைத் தேடி வருகின்றனர்.     

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

பெண்ணை எரித்துக் கொன்ற நபர்: லிவ்இன் உறவில் வாழ்ந்த பெண்ணை வேறு நபருடன் பார்த்ததால் வெறிச்செயல்!

பெங்களூருவில் உள்ள ஹுலிமாவு ரோட்டில் வனஜாக்‌ஷி(25) என்ற பெண் தனது ஆண் நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரில் இருந்த நபர் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே ... மேலும் பார்க்க