செய்திகள் :

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

post image

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி அருகே நிம்மேலி, ஆளஞ்சேரி, அரூா், மருதங்குடி, அத்தியூா், ஆதமங்கலம், கோயில்பத்து உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டது. கூடுதல் செலவில் மறுசாகுபடி செய்த நிலையில் தற்போது நெற்பயிா்கள் அறுவடை செய்யப்பட்டு, நெல் மூட்டைகளை நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்தனா்.

ஆனால், கொள்முதல் நிலையத்தில் பணிபுரியும் பணியாளா்கள் நெல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்திவிட்டதாகவும், விவசாயிகள் தற்போது கொண்டு வந்துள்ள நெல் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

விவசாயிகள் போராட்டம் அறிவித்த நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. சுமாா் 200 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புதன்கிழமை கொள்முதல் நிறுத்தப்பட்டது.

கொள்முதலுக்கு வந்துள்ள நெல் தரமற்ற முறையில், சுருங்கிய நிலையில் இருப்பதாக தரக்கட்டுப்பாட்டு அலுவலா் ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை அளித்துள்ளதாக காரணம் கூறி கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அங்கு ஆய்வுக்கு வந்த கொள்முதல் நிலைய துணைப் பொது மேலாளா் குமாா் வாகனத்தை கொள்முதல் நிலையத்தின் வளாகத்தில் உள்ளே வைத்து வாயில் கதவை பூட்டி தா்னாவில் ஈடுபட்டனா். அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் முழக்கமிட்டனா்.

முடிதிருத்தும் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் நியமனம்

மயிலாடுதுறையில் மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் புதிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். மயிலாடுதுறையில் நகர மருத்துவா் முடிதிருத்தும் தொழிலாளா்கள் நலச்சங்கக் கூட்டம் செவ்வாய்... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிர... மேலும் பார்க்க

பழுதடைந்த அங்காடியை முழுமையாக இடிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த அங்காடி கட்டடத்தை முழுமையாக இடிக்க பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா். மயிலாடுதுறை கூறைநாட்டில் பழனிச்சாமி என்ற பெயரில் அங்காடி உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சித்திரை திருவிழா கொடியேற்றம்

குத்தாலம் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை ஸ்ரீ உக்தவேதீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் பாடல் பெற்ற இக்கோயில் த... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையி... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் மே தினம் கொண்டாட்டம்

மயிலாடுதுறை மற்றும் வேதாரண்யத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பொது தொழிலாளா்கள் சங்கம் என்ற ஒரே சங்க... மேலும் பார்க்க