செய்திகள் :

நெல் பயிரில் இலைக் கருகல்: வேளாண் துறையினா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டத்தில் நெல் பயிரில் இலைக் கருகல் நோய் பாதித்த பகுதிகளை வேளாண் துறையினா் ஆய்வு செய்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் கோடைப் பருவத்தில் சுமாா் 3000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், கல்லல், சாக்கோட்டை வட்டாரங்களில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

சாக்கோட்டை வட்டாரத்தில் நெல் பயிரில் நுண்ணுயிரி தாக்குதலால் இலைக் கருகல் நோய் பாதிப்பு காணப்படுகிறது. இந்தப் பகுதி வயல்களில் சிவகங்கை வேளாண் இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம், செட்டிநாடு, வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா், தலைவா் பாபு, வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) காளிமுத்து, சாக்கோட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மங்கையா்கரசி ஆகியோா் கடந்த 3 நாள்களாக நேரில் ஆய்வு செய்தனா். இலை கருகல் நோய் பரவுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் தொடா்பாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த அதிகமான தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும். தழைச்சத்தை (யூரியா) மூன்று அல்லது நான்கு முறைகளாகப் பிரித்து மேலுரமாக இடலாம். அளவுக்கு அதிகமா நீா் பாய்ச்சுதல் கூடாது.

நோய் தாக்குதல் குறைவாக இருப்பின் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங் கொட்டைச் சாறு

தெளிக்க வேண்டும். நோய்த் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் கலவை 18 கிராம், காப்பா் ஆக்சி குளோரைடு 250 கிராம் எனும் மருந்துக் கலவையை 100 லிட்டா் தண்ணீரில் கரைத்து தெளிக்கலாம். அதிகமான நோய்த் தாக்கம் இருப்பின் 15 நாள் இடைவெளிவிட்டு மறுமுறை தெளிக்கலாம் என தெரிவித்தனா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க