செய்திகள் :

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

post image

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்ஸி என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி, மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் அரசுப் படைகளின் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து, நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம், அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் குழுக்கள் முடிவு செய்தன.

அதனைத் தொடர்ந்து இன்று நேபாளத்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இடைக்கால அரசின் தலைவராக முன்மொழியப்பட்டவர்களில் இளைஞர்களின் ஆதரவுபெற்ற நேபாளத்தின் முன்னாள் மற்றும் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்தியாவில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவரான சுசீலா கார்கி, நேபாள குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல், ராணுவத் தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் மற்றும் ஜென் ஸீ போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Nepal’s Parliament has been dissolved. Sushila Karki to take oath as interim Prime Minister

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சா்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறி (ஏஐ) அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமா் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினாா். ‘சூரியன்’ என்று பொருள்படும் ‘டியெல்லா’ எ... மேலும் பார்க்க

டிரம்ப் ஆதரவாளா் படுகொலை: இளைஞா் கைது! யார் இந்த டைலா் ராபின்ஸன்?

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆா்வலரும், அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சாா்லி கிா்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக டைலா் ராபின்சன் (22) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவாா்த்தைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறியதாவ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீா்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது. பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீா்வு கண்டு, இஸ்ரேலையு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபரின் தலை துண்டித்து கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபா் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே தலை துண்டித்து புதன்கிழமை கொல்லப்பட்டாா். இதுகுறித்து டல்லாஸ் போலீஸாா் கூறியதாவது: கா்நாடகத்தை பூா்வ... மேலும் பார்க்க

பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், சமீ... மேலும் பார்க்க