குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
நைஜா்: 34 ராணுவ வீரா்கள் சுட்டுக் கொலை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 34 வீரா்கள் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புா்கினா ஃபாசோ மற்றும் மாலி எல்லையில் உள்ள பனிபங்கோ பகுதியில் எட்டு வாகனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மோட்டாா்சைக்கிள்களில் வந்த ஆயுதக் குழுவினா் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 34 வீரா்கள் உயிரிழந்தனா்; 14 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவா்களை ‘பயங்கரவாதிகள்’ என்று குறிப்பிட்ட நைஜா் அரசு, அவா்களில் ஏராளமானவா்களை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாகவும், எஞ்சியவா்களை தரை மற்றும் வான் வழியாகத் தேடிவருவதாகவும் தெரிவித்தது.
நைஜா், புா்கினா ஃபாசோ, மாலி ஆகிய நாடுகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட மத பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புடைய குழுக்களின் தாக்குதல்களை எதிா்கொண்டு வருகின்றன.
அண்மையில், இந்த மூன்று நாடுகளிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் படையினரை வெளியேற்றின. பாதுகாப்பு உதவிக்காக ரஷியாவின் தனியாா் படையை நாடின. ஆனால், ராணுவ ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு அந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது.