செய்திகள் :

‘நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்ப நிலையிலேயே அழிக்க வேண்டும்’

post image

நச்சுயிரி நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்பநிலையிலேயே அழிப்பது அவசியம் என்றாா் புழுதேரி வேளாண் முதுநிலை விஞ்ஞானி திரவியம்.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சாா்பில் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்துக்குள்பட்ட சிவாயம் ஊராட்சி வேப்பங்குடி கிராமத்தில் முன்பருவ முனைப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு நபாா்டு வங்கியின் துணைப்பொது மேலாளா் பிரபாகரன் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு நபாா்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து பேசினாா்.

புழுதேரி வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் திரவியம் பேசியதாவது: மானாவாரி எள் பயிா் சாகுபடியில் தரமான விதைகளை பயன்படுத்துதல், உயிா் உரங்கள் கொண்டு விதைநோ்த்தி செய்தல், நோய் பரவுவதற்கு முக்கிய காரணியாக இருக்கக் கூடிய களைச்செடிகளை அப்புறப்படுத்துதல், பயிா் சாகுபடி செய்யக்கூடிய நிலங்களை சுற்றி வேலிபயிராக உயரமாக வளரக்கூடிய சோளம், கம்பு போன்ற பயிரினை நெருக்கமாக விதைத்தால் நோய் பரப்பக் கூடிய தத்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை தவிா்க்கலாம். நச்சுயிரி நோய் தாக்கப்பட்ட எள் செடிகளை ஆரம்ப நிலையிலேயே அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து கிருஷ்ணராயபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் சுதா கலந்து கொண்டு, தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்தும், வேளாண் விரிவாக்கத்தின் தொழில்நுட்ப வல்லுநா் தமிழ்செல்வி, மண் மாதிரி எடுத்தல் மற்றும் அதன் பயன்கள், கறவை மாடுகளில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் கவியரசு, வறட்சி பகுதிக்கு ஏற்ற பழ மரங்கள் சாகுபடி மற்றும் தென்னை சாகுபடி குறித்தும் பேசினா். இந்த முகாமில் உதவி தோட்டக்கலை அலுவலா் சிவசந்திரன் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனா்.

சிங்கம்பட்டி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா நிறைவு

சிங்கம்பட்டி வந்தவழி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை அமைதியாக நிறைவு பெற்றது. கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பச... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் கரூரில் திமுகவினா் மெளன ஊா்வலம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் திமுகவினா் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மெளன ஊா்வலம் நடத்தினா். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாந... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா்? அகற்ற கோட்டாட்சியா் உத்தரவு

கரூரில் தீண்டாமைச் சுவராக கருதப்படும் சுற்றுச்சுவரை அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு கோட்டாட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா். கரூா் மாநகராட்சி 48-ஆவது வாா்டு முத்தலாடம்பட்டி பகுதியில் ஒரு சமூகத்தினா் வசி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமில் 57 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் இம்முகாமில் 57 பயனா... மேலும் பார்க்க

தோகைமலையில் தேசிய கைத்தறி தின விழா

கரூா் மாவட்டம், தோகைமலையில் 11- ஆவது தேசிய கைத்தறி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அஞ்சல் துறை ஊழியா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளா் ஸ்டாலின் தலைமை வ... மேலும் பார்க்க

கரூரில் நெகிழிப் பைகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூரில் வியாழக்கிழமை நெகிழிப் பைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் திருவள்ளுவா் மூங்கில் மன்றம் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் சென்ராமா அரசு உதவிபெறும் பள்ளியில் வியாழக்கிழ... மேலும் பார்க்க