செய்திகள் :

பகல் கனவாகும் ஐபிஎல்..! ஜிஎஸ்டி உயர்வால் மேலும் உயரும் டிக்கெட் விலை!

post image

மத்திய அரசின் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதத்தின் எதிரொலியால் ஐபிஎல் டிக்கெட்டின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் நேற்று(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இந்த வரிவிகித அறிவிப்புகள் வருகிற 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் நிலையில், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

குளியல் பொருள்கள், நெய் மற்றும் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான உணவு பாட்டில்கள், டயப்பர்கள் மற்றும் நாப்கின்கள் போன்றவைக்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில் ரேசிங், கிளப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டணங்கள் 28 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் கோடைக்கால விடுமுறைகளை மையமாக வைத்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி உலகிலேயே அதிக வருவாய் ஈட்டும் லீக் போட்டியாகவுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு தனி மவுசு இருந்தாலும், சென்னை, பெங்களூரு, மும்பை அணிகளின் போட்டிகளைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆன்லைன் காத்திருந்து டிக்கெட் கிடைக்காத விரக்தியில் கள்ளச்சந்தைகளிலும் டிக்கெட்டுகளை வாங்குகின்றன.

நேரில் டிக்கெட் விற்பனை என்று கூறினாலும், அங்கும் ஐபிஎல் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில், தற்போது ஐபிஎல் டிக்கெட்டுக்கான வரிவிகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய வரிவிகிதத்தின் அடிப்படையில் ஐபிஎல் டிக்கெட்டின் விலை ரூ.500 டிக்கெட் ரூ.640 லிருந்து ரூ. 700 ஆகவும், ரூ.1,000 டிக்கெட் ரூ.1,280 லிருந்து ரூ.1,400 ஆகவும், ரூ.2,000 டிக்கெட் ரூ.2,560 லிருந்து ரூ. 2,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இருப்பினும், ஐபிஎல்லை போன்றே இந்திய சூப்பர் லீக், புரோ கபடி லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இந்த வரிவிகிதத்தில் வருமா? என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

Watching IPL Live Just Got Costlier! New GST Hike Pushes Stadium Tickets into Luxury Bracket

இதையும் படிக்க : இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க