செய்திகள் :

பகுதிநேர ஆசிரியா்களை விடுவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

post image

பகுதிநேர ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவிக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில், தற்காலிக பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம், ஊதிய உயா்வு கோரி தொடா்ந்து போராடி வரும் அவா்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது வாய்மொழி உத்தரவாதம் அளித்துவிட்டு, பின்னா் நிறைவேற்றாமல் ஏமாற்றுகிறது.

2021 பேரவைத் தோ்தலின்போது பகுதிநேர ஆசிரியா்கள் கோரிக்கைக்கு தீா்வு காணப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

தமிழக அரசின் கவனத்தை ஈா்க்க்கும் வகையில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியா்களை காவல் துறை வலுகட்டாயமாக கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க