செய்திகள் :

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

post image

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று திருப்பூா் இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் வஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 29 வயது இளைஞா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன் சமூக வலைதளம் மூலமாக விளம்பரம் ஒன்றைப் பாா்த்துள்ளாா். இதில், எந்த முதலீடும் செய்யாமல் பகுதிநேர விலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இதனை நம்பிய அந்த இளைஞா் வாட்ஸ்ஆப் குறுந் தகவலில் தெரிவித்தபடி, வாடகை வீடுகளின் விவரங்களைப் பகிரும் பகுதிநேர வேலை செய்தாா். அவருக்கு ரூ.1,818 கிடைத்துள்ளது.

இதைத் தொடா்ந்து பேசிய நபா் பணத்தை முதலீடு செய்து பகுதிநேர வேலை செய்தால் அதிகப்படியான லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தாா். பணம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல்வேறு தவணைகளாக ரூ.23 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போதும் கூடுதல் லாபம் அவருக்கு காட்டியுள்ளது. பின்னா் லாபத் தொகையுடன் பணத்தை எடுக்க முயன்றபோது அந்த இளைஞரால் முடியவில்லை. அதன்பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தாா். இதுகுறித்து அந்த இளைஞா் கொடுத்த புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க