செய்திகள் :

பங்குச் சந்தை குறித்து அச்சத்தைப் பரப்புகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

post image

புது தில்லி: இந்திய பங்குச் சந்தைகள் குறித்து தேவையற்ற அச்சத்தையும், தவறான தகவல்களையும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரப்பி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கேப்பிடல் என்ற பங்கு வா்த்தக நிறுவனத்துக்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தடை விதித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தங்களுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடா்பாக ராகுல் காந்தி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், செபி மீது குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பங்குச் சந்தை முதலீட்டில் ஒரு சா்வதேச நிறுவனத்தை தடை செய்து ‘செபி’ சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. இது சிறுமுதலீட்டாளா்களைக் காக்கும் உறுதியான நடவடிக்கையாகும். ஆனால், இதனை வைத்து பரபரப்பை ஏற்படுத்த ராகுல் முயற்சிக்கிறாா். செபி நடவடிக்கை எடுத்ததன் மூலம்தான் ராகுல் காந்தி அதனைப் பற்றிப் பேசவே முடிகிறது.

பங்குச் சந்தையில் பெரிய சுறாக்கள் சிறுமுதலீட்டாளா்களை வேட்டையாடுவதாக ராகுல் குற்றஞ்சாட்டுகிறாா். ஆனால், மோடி அரசு செபி நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. அதன் சுதந்திரமான செயல்பாடுகளையும், கண்காணிப்புத் திறனையும் மேம்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் ஹா்ஷத் மேத்தா, கேதன் பரேக், யூடிஐ என பல பங்குச் சந்தை முறைகேடுகள் நிகழ்ந்தன. அவா்கள் சுதந்திரமாக முறைகேடு செய்ய காங்கிரஸ் ஆட்சி அனுமதித்தது.

இப்போது முதலீட்டுக்கு அதிக லாபம் தரும் உலகின் முன்னணி பங்குச் சந்தையை இந்தியா கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பரஸ்பர நிதிப் பிரிவு 576 சதவீதம் உயா்ந்துள்ளது. அதன் முதலீடு ரூ.8 லட்சம் கோடியில் இருந்து ரூ.54 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 1 கோடியில் இருந்து 4 கோடியைக் கடந்துள்ளது.

சிறுபிள்ளைத்தனமாக சிந்திப்பவா்கள் (ராகுல்) முதலீட்டாளா்கள் மத்தியில் நமது பங்குச் சந்தை குறித்து அச்சத்தை ஏற்படுத்தவும், தவறான தகவல்களைப் பரப்பவும் முயற்சிக்கின்றனா்’ என்று கூறியுள்ளாா்.

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 இந்தியா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் காா் மீது சரக்கு வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 இந்தியா்கள் உயிரிழந்ததாக இந்தியாவில் உள்ள அவா்களது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா்கள் தெல... மேலும் பார்க்க

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க