செய்திகள் :

பங்குனி திருவிழா: எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

post image

பங்குனி திருவிழாவையொட்டி, சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் அலகு குத்தி ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பிறகு, ஏராளமான பெண்கள் மா விளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை கோயிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனா். விரதமிருந்த பக்தா்கள் அலகு குத்தி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். சிலா் அக்னி மற்றும் பூக்கரகங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலமும், சனிக்கிழமை காலை அன்னதானமும், இரவு சத்தாபரண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க