செய்திகள் :

பஞ்சாப் இடைத்தேர்தலில் கேஜரிவால் போட்டி? முதல்வராகிறாரா?

post image

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் நடைபெற்ற பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தில்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை தேர்தலில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், மூன்று முறை தில்லி முதல்வராக பதவி வகித்த அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்தது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தற்போது ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, பஞ்சாபில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ரூ. 200 தாளும் திரும்பப் பெறப்படுமா? என்ன சொல்கிறது ஆர்பிஐ?

லூதியானா இடைத்தேர்தலில் கேஜரிவால்

லூதியானா மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஆம் ஆத்மியின் குர்ப்ரீத் கோகி கடந்த மாதம் உயிரிழந்த நிலையில், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் எம்எல்ஏக்களுடனான ஆலோசனையின்போது, இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இறுதியில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பஞ்சாப் இடைத்தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாகவும், வெற்றி பெற்றால் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் பார்தாப் சிங் பஜ்வா தெரிவித்திருந்தார்.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க