செய்திகள் :

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

post image

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த மே.12 ஆம் தேதியன்று அதனை வாங்கிக் குடித்த எராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில், நேற்று (மே 13) சுமார் 21 பேர் பலியான நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும், 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால், இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்தக் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள பங்கலி, படால்புரி, மராரி கலான், தல்வாண்டி கும்மன், கர்னாலா, பங்வான் மற்றும் தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், பலியானவர்களின் குடும்பத்தினரை நேற்று (மே 13) சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவ... மேலும் பார்க்க

உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை ‘பாா்கவாஸ்திரா’ பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. சமீபத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ மீது தடை- ஐ.நா.வில் இந்தியா முறையீடு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில... மேலும் பார்க்க

மீண்டும் படப்பிடிப்பில் ஆந்திர துணை முதல்வர்!

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் பவன் கல்யான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட பிரபல நடிக... மேலும் பார்க்க

துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு 60% சரிவு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர். சுற்றுலாத் தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயல... மேலும் பார்க்க

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி... பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை வீட்டைச் சேர்ந்தவர், மாணவி மீது அமிலத்தை வீ... மேலும் பார்க்க