செய்திகள் :

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

post image

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரைக் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குஜராத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது தாக்கரேவின் பேச்சு.

இதையடுத்து, அரசியல் ஆதாயத்துக்காக தேசிய தலைவர்களை அவமதித்து பேசுவதாக தாக்கரேவுக்கு ‘பட்டிதார்’ சமூகத்தைச் சேர்ந்தோரும் ஆம் ஆத்மி கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

கடந்த ஜூலை 18-ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் பேசிய தாக்கரே, குஜராத்தைச் சேர்ந்த சில தொழிலதிபர்களும் தலைவர்களும் மகாராஷ்டிரத்திலிருந்து மும்பையை பிரிக்க நினைத்தனர் என்றார். அப்போது அவர் வெளிப்படையாக படேல் சமூகத்தை தாக்கி சர்தார் படேல் மற்றும் மொரார்ஜி தேசாய் பெயர்களை குறிப்பிட்டதால், குஜராத்தில் தாக்கரே மீது கடும் கொந்தளிப்பு உண்டாகியுள்ளது.

இதையடுத்து, பட்டிதார் சமூகத்தை சேர்ந்த தலைவர் அல்பேஷ் கதீரியா பேசுகையில், “தாக்கரேவால் குஜராத் பெருந்தலைவர்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மராத்தி மனப்பான்மையை கொண்டவராக தாக்கரே பேசியிருக்கிறார் என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“குஜராத் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவமானமக அமைந்துவிட்டது தாக்கரேவின் பேச்சு. ஆகவே, அவர் பொது மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“இந்தியாவின் பெருமையாக திகழும் இரு பெரும் தலைவர்களை தாக்கரே அவமதித்து பேசும்போது, மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக அரசு அமைதி காப்பது ஏன்?” என்று ஆம் ஆத்மி கேள்வியெழுப்பியுள்ளது. தாகரே விவகாரம் குஜராத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இதையும் படிக்க:1ஆம் வகுப்பு முதல் ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டால் பள்ளிகள் மூடப்படும்: ராஜ் தாக்கரே

Raj Thackeray's controversial remarks against Sardar Vallabhbhai Patel and former Prime Minister Morarji Desai have sparked a political storm in Gujarat. 

மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தோ்வு: 13 போ் அரசியல் குடும்பத்தினா்

சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷீத் கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாதுகாப்புப் படையினருடன் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கிஷ்த்வாா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

அமா்நாத்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமா்நாத் குகைக் கோயிலில் பனி லிங்க தரிசனம் மேற்கொண்ட பக்தா்களின் மொத்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது. இத்தகவலை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். தெற்கு ... மேலும் பார்க்க

காஷ்மீா் இளைஞா்களை கெடுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கு முற்றுப்புள்ளி: துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா். ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

ரூ.15,851 கோடிக்கு உள்ளீட்டு வரி சலுகை மோசடி: ஜிஎஸ்டி அதிகாரிகள்

ரூ.15,851 கோடிக்கு மோசடியான உள்ளீட்டு வரி சலுகை (ஐடிசி) கோரிக்கைகளை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ‘நிகழ் நிதியாண்டின் முதல் ... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடி... மேலும் பார்க்க