செய்திகள் :

பட்ஜெட் வெளிப்படைத்தன்மை: பாஜக அரசைக் கேள்வி எழுப்பிய அதிஷி!

post image

மாநில நிதிநிலைக்கான நிதி ஆதாரம் குறித்து தில்லி முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி பாஜக அரசைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களுடன் பேசிய அதிஷி,

பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ள பணம் எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பொருளாதார ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்காததற்காகவும், இது நீண்டகால நடைமுறையிலிருந்து விலகல் என்றும் அவர் பாஜக அரசை விமர்சித்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது நிதி தெளிவை வழங்கும் ஒரு தொழில்நுட்ப ஆவணம். இது பல ஆண்டுகளாக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இந்தமுறை பாஜக அரசு அதைத் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

கணக்கெடுப்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், முந்தைய ஆண்டை விட 20 சதவீத பட்ஜெட் அதிகரிப்பு என்ற பாஜக அரசின் கூற்று துல்லியமானதா என்பதை தெளிவுபடுத்தியிருக்கும்.

அரவிந்த் கேஜரிவாலின் ஆட்சிக் காலத்தில், அரசு ஒருபோதும் நிதி இழப்புகளைச் சந்தித்ததில்லை. ஆனால் இப்போது ​​பாஜக ஆட்சியில் இருப்பதால், அரசு பற்றாக்குறையில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

தன்னுடைய கூற்றுகளுக்கு ஆளும் கட்சி இன்னும் பதிலளிக்கவில்லை.

முன்னதாக செவ்வாயன்று, தில்லி முதல்வர் ரேகா குப்தா, 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ரூ. 1 லட்சம் கோடி செலவில் தாக்கல் செய்தார், இது முந்தைய ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகமாகும்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க