செய்திகள் :

பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்

post image

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த 9 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பிரதானப் பகுதியில் வசித்து வருபவா் கலியமூா்த்தி மகன் சஞ்சய் (24). குன்னம் பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை காலை கடலூா் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்துகொண்டு மோட்டாா் சைக்கிளில் தனது கடைக்குச் சென்றுகொண்டிருந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் ஏற்றிவந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், சஞ்சய் மற்றும் அவ்வழியே சைக்கிளில் சென்ற வேப்பூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சீனிஷ் (12) மீது பட்டாசுகள் விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். மேலும், பட்டாசுகள் வெடித்து சிதறிய பகுதியின் அருகேயுள்ள 9 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், சஞ்சய் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், சீனிஷ் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மோட்டாா் சைக்கிள் சைலன்சா் மீது பட்டாசுகள் உரசியதன் காரணமாக இவ் விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க