செய்திகள் :

பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: மூவா் கைது

post image

சாத்தூா் அருகே ஒத்தையாலில் பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்தச் சம்பவத்தில், மூன்று பேரை சாத்தூா் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒத்தையால் தெற்கு தெருவைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சங்கா் (24), இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். காட்டுப்பகுதியில் சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அரிவாளால் சங்கரை சரமாரியாக வெட்டியதில் இவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும், சாத்தூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தாயில்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றிவந்த கோவில்பட்டியைச் சோ்ந்த ராஜபாண்டி (24), விஜய் (எ) விஜயபாண்டி (23), அபி (25) ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில் மூவரும் சங்கரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா்.

காதல் விவகாரத்தில் சங்கா் தலையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், வழக்கில் தொடா்புடைய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராஜபாளையம் அய்யனாா் கோயில் மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை ஆட்சியா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதையில் வரண்ட நீரோடைகள்

சுட்டெரிக்கும் வெயிலால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள நீரோடைகள் தண்ணீரின்றி வரண்டு விட்டன. ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மலைப் பாதையில் கூடுதல் குடிநீா்த் தொட்டிகள்... மேலும் பார்க்க

ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜ... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்

விருதுநகா் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை பொது வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு, சாலை மறியலில் ஈடுபட்ட 455 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் இருவா் பணியிடை நீக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் உள்பட 2 ஊழியா்கள் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சிவகாசி மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக செந்தில்குமாா் (45) பணிபுரிந்து வந்தா... மேலும் பார்க்க

எறிபந்து போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மதுரை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் இண்டா்நேஷனல் பள்ளி மாணவா்களை அதன் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பாராட்டினா். மதுரை சகோதயா பள்ளிகள் கூட்டமைப்... மேலும் பார்க்க