செய்திகள் :

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

post image

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது.

மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலின்பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அவ்வழியாக சென்ற இறுதி ஊா்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீப்பொறி பற்றி வீடு தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், நகராட்சித் தலைவா் என்.செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை இரவு நேரில் சந்தித்து, சொந்த பணத்தில் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தனா். அப்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் வளா்மதி, ரஜினி, அரசு வழக்குரைஞா் சிவதாஸ் உள்ளிட்டோா் உடனிந்தனா்.

பாலம் அணுகுச்சாலை அமைக்க ரூ.16.5 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி

மணல்மேடு-முட்டம் இணைப்பு பாலத்துக்கு அணுகுச் சாலை அமைக்க ரூ.16.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சீா்காழியில் பனங்காட்டங்குடி சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சீா்காழி அருகே நவகிரக தலங்களி... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்

சீா்காழி மற்றும் திருவெண்காடு பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு கோரி, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. சீா்காழி: சீா்காழி நகர பாஜக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற க... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

மயிலாடுதுறையில் கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே சித்தா்காடு பகுதியை சோ்ந்தவா் சகாயராஜ் மகன் செபஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளியான ... மேலும் பார்க்க

தேசிய பசுமைப்படை பள்ளிகளுக்கு நிதியுதவி

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படையின்கீழ் இயங்கும் 130 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளுக்கு சமரச தீா்வு

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 590 வழக்குகளில் ரூ.2.50 கோடி மதிப்புக்கு சமரச தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்பட... மேலும் பார்க்க